Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

பவித்ரா ஜனனி விஜே.விஷால் வாக்குவாதம் ஒருபக்கம்… சண்டைக்கு மல்லுக்கட்டும் ரஞ்சித் மற்றும் ரவீந்தர் மறுபக்கம்… மூன்றாவது நாள்லே பரபரப்பான பிக்பாஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தினந்தோறும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்று ப்ரோமோக்களை வெளியாகிறது. இந்நிலையில், அக்டோபர் 9ஆம் தேதியான இன்று, போட்டியின் மூன்றாவது நாள் தொடர்பான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில், போட்டியாளர்கள் விஷால் மற்றும் பவித்ரா ஜனனி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. விஷால் , பவித்ரா ஜனனி-யை டி என அழைத்ததை பவித்ரா பிடிக்காமல், தன்னை அப்படி அழைக்க வேண்டாம் என கூறுகிறார்.

விஜே.விஷால் தொடர்ந்து, “நான் எல்லாரையும் அப்படி அழைக்கிறேன்,” என்று கூறிய போது, பவித்ரா, “என்னை ‘டி’ சொல்லி அழைப்பது எனக்கு பிடிக்காது. நீ சொல்லாதே, நான் என்ன பண்ணனும்?” எனக் கேட்கிறார். இதனால், மற்ற போட்டியாளர்கள் விஷாலை தடுக்க முயற்சிக்கின்றனர். மேலும், தீபக், விஷாலை வெளியே அழைத்துச் செல்கிறார். ஆனால் பவித்ரா, அங்கேயும் வந்து, விஷாலுடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். இருவருக்கும் இடையே பிரச்னை மோசமாகிறது. ரசிகர்கள் இதனை, பவித்ரா முன்னேற்பாடாக ஆட்டத்தைப் புரிந்து கொண்டு, அவரது கேம் பிளான் எனக் கூறி வருகின்றனர்.

அதேபோல் இன்று மதியம் 12 மணிக்கு வெளியான மற்றொரு ப்ரோமோவில் ரவீந்தர்-க்கும் ரஞ்சித்துக்கும்‌ இடையே கடுமையான வாக்குவாதம் நடப்பதாக காட்டப்படுகிறது. ஹவுஸ்மேட்ஸ் அவர்களை தனித்தனி சமாதானம் செய்கின்றனர் ஆனால் ரஞ்சித் ரவீந்தர்-ஐ அடிக்க முயல்வது போல் தன்னை தடுக்கும் போட்டியாளர்களை மீறி செல்ல முயற்சிக்கிறார் ஆனால் ஹவுஸ்மேட்ஸ் அவரை தடுக்கின்றனர். இப்படி பரபரப்புக்கு பஞ்சமில்லாத இரண்டு ப்ரோமோக்கள் பார்வையாளர்களிடையே‌ என்ன சண்டை என்ன காரணம் என மிகப்பெரிய  விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

- Advertisement -

Read more

Local News