Wednesday, October 2, 2024

டோலிவுட்டில் பிஸியாகும் அனிருத்… நானியின் புதிய படத்தில் கமிட்டாகிறாரா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு திரைப்படமான “தசரா” படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடிலாவின் இயக்கத்தில் நடிகர் நானி, அவரது 33வது படத்தில் நடிக்கிறார். இதனை “ஸ்ரீ லஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ்” நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. இந்த படத்திற்கு இசையமைப்பாளராக அனிரூத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

நானி நடித்த “கேங் லீடர்” படத்திற்கும் அனிரூத் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான “தேவரா” படத்தில் காப்பி விமர்சனங்களை மீறி அனிரூத் இசைக்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக, அவரை இப் படத்திற்கும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

தெலுங்கு பட உலகில் பல புதிய வாய்ப்புகள் அனிரூத் நோக்கி வருவதால், இனி தெலுங்கிலும் அவர் பிஸியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News