Wednesday, October 2, 2024

ரெட்டதல படத்தின் படப்பிடிப்பு நிறைவு… படக்குழுவினருக்கு பிரியாணி பரிமாறி மகிழ்ந்த அருண் விஜய்! #RETTA THALA

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் அருண் விஜய், நடிகர் விஜயகுமாரின் மகனாக சினிமாவில் அறிமுகமானாலும், சினிமாவில் தனது இடத்தை நிலைநிறுத்திக் கொள்வது அவருக்கு சுலபமாக அமையவில்லை. பல வருடங்கள் போராடிய பிறகே அவர் ஒரு நல்ல நடிகர் என்ற இமேஜை பெற்றார். “என்னை அறிந்தால்” படத்தில் வில்லனாக நடித்தபோதிலும், அஜித்திற்கு இணையாக முக்கியமான கதாபாத்திரத்தை அருண் விஜய் பெற்றிருந்தார். 

இந்நிலையில், அவர் தொடர்ந்து நடித்த “தடையற தாக்க” உள்ளிட்ட படங்கள் அவருக்கு சிறப்பாக அமைந்தது. தற்போது, பாலா இயக்கத்தில் “வணங்கான்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கிடையில், அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “ரெட்ட தல” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இதனிடையே, படத்தின் சூட்டிங் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், நடிகர் அருண் விஜய் படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து அளித்து, அவர்களை அசத்தியுள்ளார். இந்த விருந்தில், அருண் விஜய் அனைவருக்கும் உற்சாகத்துடன் பிரியாணியை பரிமாறியதை பார்க்க முடிந்தது.

- Advertisement -

Read more

Local News