Friday, September 27, 2024

வேட்டையன் படத்தில் காவல் துறை அதிகாரியாக என்ட்ரி கொடுக்கும் நடிகர் கிஷோர்! #VETTAIYAN

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தனது 170-வது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான ‘மனசிலாயோ’ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இசையமைப்பாளர் அனிருத், மறைந்த பிரபல பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவனின் குரலை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தியுள்ளார்.

படத்தில் நடித்த நடிகர்களின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் தொடர்ச்சியாக வெளியாகும் என படக்குழு கூறியது. அதன்படி, ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பகத் பாசில், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் மற்றும் அபிராமி ஆகியோரின் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்தில் கதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்தும் விதமாக, படக்குழு தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் வெளியான வீடியோவில், நடிகர் கிஷோர் ‘ஹரிஷ்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என படக்குழு அறிவித்துள்ளது. தென்னிந்திய திரையுலகில் திறமையான நடிகர்களில் ஒருவரான கிஷோர் ‘ஆடுகளம்’, ‘வன யுத்தம்’ படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, ‘வன யுத்தம்’ படத்தில் வீரப்பனாகவும், ‘வெண்ணிலா கபடி குழு’, ‘சார்பட்டா பரம்பரை’, ‘பொன்னியின் செல்வன்’, ‘ஜெயிலர்’ உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News