Saturday, September 14, 2024

மூன்றாவது முறையாக இணையும் நானி சாய் பல்லவி ஜோடி? இயக்குனர் யார் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘குபேரா’ படத்தை இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வருகிறார். இப்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சேகர் கம்முலா இயக்கவிருக்கும் புதிய படத்தில் நானி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்றும், இதில் கதாநாயகியாக நடிக்க சாய் பல்லவியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. சாய் பல்லவி, முன்னதாக, சேகர் கம்முலா இயக்கத்தில் ‘பிடா’ மற்றும் ‘லவ் ஸ்டோரி’ ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார்.

மேலும், நானி மற்றும் சாய் பல்லவி இணைந்து ‘எம்சிஏ’ மற்றும் ‘ஷியாம் சிங்கா ராய்’ ஆகிய இரண்டு பிளாக்பஸ்டர் படங்களில் நடித்துள்ளனர். இந்த தகவல் உண்மையானால், சாய் பல்லவியுடன் நானி மற்றும் சேகர் கம்முலா மூன்றாவது முறையாக பணியாற்றுவது ஆகும்.

நானி மற்றும் சாய் பல்லவி மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளதாக வெளியான தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘சூர்யாவின் சனிக்கிழமை’ திரைப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, நானி ‘கோர்ட்’ மற்றும் ‘ஹிட் 3’ ஆகிய படங்களில் கமிட் ஆகியுள்ளார். சாய் பல்லவி ராமாயணம் படத்தில் சீதையாக நடித்து வருகிறார்.

- Advertisement -

Read more

Local News