Saturday, September 14, 2024

டிமான்டி காலனி – 3 எப்போது வரும்? அஜய் ஞானமுத்து கொடுத்த அப்டேட்! #DemonteColony3

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், 2015 ஆம் ஆண்டில் வெளியான ஹாரர் திரில்லர் படமான “டிமான்ட்டி காலனி” மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி, 15 ஆம் தேதி வெளியிடப்பட்டது.இந்தப் படத்தில், நடிகர் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைப்பை செய்துள்ளார்.

திரைப்படம் வெளியாகிய பின்னர், மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ரிலீஸான முதல் நாளில், இப்படம் 3.3 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. அருள்நிதி நடித்த இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பும் அதிகரித்த வசூலும் கிடைத்துள்ளது. இன்று சென்னையில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் “டிமான்ட்டி காலனி 2” திரைப்படம் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் வசூல் மற்றும் புக்கிங்ஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், படத்தின் அடுத்த பாகம் குறித்து இயக்குனர் அஜய் சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அடுத்ததாக படத்தின் தொடர்ச்சியாக இரு பாகங்கள் உருவாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். இப்பொழுது இன்னொரு படத்தை இயக்கி முடித்த பிறகு, மீண்டும் “டிமான்ட்டி காலனி 3” படத்தை இயக்கப்போவதாகவும், அந்தப் பாகம் 2026 ஆம் ஆண்டில் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News