Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

கன்னட சினிமா இந்திய அளவில் கவனத்தைப் பெற்றுள்ள தருணம் இது – கே.ஜி.எப் நடிகர் யஷ் தேசிய விருது வென்றது குறித்து பெருமிதம்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2022ம் ஆண்டிற்கான 70வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழில் ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘திருச்சிற்றம்பலம்’ படங்கள் விருதுகளை பெற்றுள்ள நிலையில், கன்னடத்திலும் ‘காந்தாரா’, ‘கேஜிஎஃப் 2’ படங்கள் விருதுகளை குவித்துள்ளன.

‘கேஜிஎஃப்’ படம் மூலம் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியவர் நடிகர் யாஷ். இந்தப் படத்தின் வரவேற்புக்கும், வசூலுக்கும் காரணமாக இருந்தவர். இந்நிலையில், யாஷ் தேசிய விருது பெற்ற அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். மேலும், “கன்னட சினிமா ஒளிரும் தருணம் இது” என்றும் அவர் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதேபோல், ‘கேஜிஎஃப் சாப்டர் 2’ மற்றும் ‘காந்தாரா’ படங்கள் இந்த ஆண்டு தேசிய விருதுகளை குவித்துள்ளன. இது குறித்து பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை பகிர்ந்து வருகின்றனர். ‘கேஜிஎஃப் 1’ மற்றும் ‘2’ படங்களின் நாயகன் யாஷ், தனது சமூக வலைதள பக்கத்தில், தேசிய விருதுகளை பெற்ற அனைத்து நடிகர், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். “கன்னட சினிமா இந்திய அளவில் கவனத்தைப் பெற்றுள்ள தருணம் இது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

- Advertisement -

Read more

Local News