Saturday, September 14, 2024

அந்த படத்தில் இல்லாதது இந்த படத்தில் உள்ளது… கொட்டுக்காளி கதாநாயகி சொன்ன அந்த விஷயம்! #Kottukkaali

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சூரியின் கொட்டுக்காளி படம் இந்த மாதம் 27ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. படத்தில் சூரிக்கு நாயகியாக அறிமுகமாகிறார் அன்னா பென். படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், அதில் அன்னா பென் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதை பார்க்க முடிந்தது.

அன்னா பென்னின் அப்பா பென்னி 30 ஆண்டுகளை கடந்து திரைத்துறையில் எழுத்தாளராக பணியாற்றிவரும் நிலையில் அன்னா பென், தற்போது நாயகியாகியுள்ளார். கடந்த 2019ம் ஆண்டில் மலையாளத்தில் வெளியான கும்பளங்கி நைட்ஸ் என்ற திரைப்படம் மூலம் என்ட்ரி கொடுத்தவர் அன்னா பென். முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருது உள்ளிட்டவற்றை குவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படம் குறித்து அடுத்தடுத்த பிரமோஷன்களை அன்னா பென் மேற்கொண்டு வருகிறார். இந்த படத்தில் மீனா என்ற கேரக்டரில் அவர் நடித்துள்ள நிலையில், மீனா தனக்குள் ஒரு அங்கம் என்பதை தான் அறிந்ததே இல்லை என்று முன்னதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் மீனா மூலமாக மதுரை வழியாக தான் ரசிகர்களை அழகான பயணத்திற்கு அழைத்துச் செல்ல காத்திருப்பதாகவும் அவர் பதிவிட்டிருந்தார்.

தொடர்ந்து அடுத்தடுத்து பேட்டிகளை கொடுத்து வரும் அன்னா பென், தற்போது கொட்டுக்காளி மற்றும் தெலுங்கில் கல்கி 2898 ஏடி படங்கள் குறித்து பேசியுள்ளார். கல்கி படத்தில் இயற்கையான விஷயங்கள் எதுவுமே இல்லை என்றும் செட்களில் மட்டுமே அடுத்தடுத்த காட்சிகள் எடுக்கப்பட்டன என்றும் அதனால் செயற்கை தனமான காட்சிகளிலேயே நடிக்க முடிந்தது என்றும் ஆனால் கொட்டுக்காளியில் இயற்கையோடு இணைந்து தான் நடித்துள்ளதாகவும் உற்சாகம் தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பேட்டி கொட்டுக்காளி படத்தின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது.

- Advertisement -

Read more

Local News