Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

உன்னை நினைத்து 2ல் சந்தானம் நடிக்கிறாரா? விளக்கமளித்த இயக்குனர் விக்ரமன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘உன்னை நினைத்து’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் விக்ரமன் சந்தானத்தை ஹீரோவாக வைத்து இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 2002ஆம் ஆண்டு சூர்யா, சினேகா, லைலா நடித்த ‘உன்னை நினைத்து’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. முதலில் விஜய் இந்தப் படத்தில் ஹீரோவாக ஒப்பந்தமாகி, சில காட்சிகளை நடித்து, பிறகு திடீரென படத்திலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக சூர்யா ஹீரோவாக நடித்தார்.

இந்த படத்தில் நாயகன் தனது காதலியை சிரமங்களின்றி வாழ்ந்திட விரும்பும் நல்ல மனசுக்காக அனைவராலும் பாராட்டப்பட்டது. இதில் வரும் நகைச்சுவை காட்சிகளும் பெரிதும் பேசப்பட்டன. ‘பூவே உனக்காக’ எப்படி விஜய்க்கு பிரபலமானதோ, அதேபோல சூர்யாவுக்கு இந்த படமும் மிகப்பெரிய கவனம் பெற்றது. இதற்கிடையில், ‘உன்னை நினைத்து’ இரண்டாம் பாகத்தில் சந்தானம் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகின. சமூக வலைதளங்களில் பலரும் இதை எதிர்நோக்கி கருத்து தெரிவிக்க, இயக்குநர் விக்ரமனிடம் இதுகுறித்து கேட்டேன்.

“‘உன்னை நினைத்து-2’ படத்தை எடுத்தால் நல்லாயிருக்கும் என்று சிந்தித்தேன், சாந்தானத்தை ஹீரோவாக வைத்து காமெடி கலந்த காதல் கதையுடன் உருவாக்க விரும்பினேன் என்பது உண்மை தான் ஆனால் அது இப்போது கையில் இல்லை. தற்போது ‘சூர்ய வம்சம்-2’ படத்தை ஆர்.பி. செளத்ரி எடுக்கச் சொன்னார், அதை எடுக்கவில்லை. இன்னொரு விஷயம் சந்தானத்தை உன்னை நினைத்து படத்துக்காக அணுகவேயில்லை. தற்போதைக்கு எந்த பார்ட்-2 படமும் எடுக்க போவதில்லை” என விக்ரமன் கூறினார். “வானத்தைப் போல பார்ட்-2 எப்போது என்று ரசிகர்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றனர்” என்ற கேள்விக்கு, “இப்போதைக்கு அந்தப் படத்தில் நடிக்கிறதற்கான நடிகர்களே இல்லை” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News