Saturday, September 14, 2024

உன்னை நினைத்து 2 பாகம் எடுத்தால் இவர் தான் ஹீரோ… இயக்குனர் விக்ரமன் சுவாரஸ்யம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

குடும்பங்கள் கொண்டாடும் சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் விக்ரமன். ‘புதிய பாதை’ படத்தில் இயக்குனரும், நடிகருமான பார்த்திபனிடம் துணை இயக்குனராக பணியாற்றிய அவர், 1990-ம் ஆண்டு வெளியான ‘புது வசந்தம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இந்த படத்தைத் தொடர்ந்து, பெரும்புள்ளி கோகுலம், நான் பேச நினைப்பதெல்லாம், பூவே உனக்காக, சூர்ய வம்சம், உன்னை நினைத்து, வனத்தைப்போல உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கினார். இதில், பூவே உனக்காக திரைப்படம் தளபதி விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. மேலும், சூர்யாவை வைத்து அவர் இயக்கிய உன்னை நினைத்து படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இயக்குனர் விக்ரமன் கடைசியாக 2014-ம் ஆண்டு நினைத்தது யாரோ என்ற படத்தை இயக்கினார். அதன்பின், அவரது மனைவிக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால், திரைப்படங்களை இயக்கவில்லை. இந்நிலையில், இயக்குனர் விக்ரமன் உன்னை நினைத்து படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் எண்ணம் உள்ளதாக சமீபத்திய ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் முழுவதும் நீண்ட நகைச்சுவை உள்ளபடி சந்தானத்தை இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்து இப்படம் எடுக்க விருப்பம் என்றவாறு குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News