பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற ராஜு தனது முதல் படமான ‘பன் பட்டர் ஜாம்’ மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார். ‘எண்ணித் துணிக’ படத்தை தயாரித்த ரெய் ஆப் ஆரோவ்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் சுரேஷ் சுப்ரமணியம் இப்படத்தை தயாரிக்கிறார். ராகவ் மிர்தாத் இசை அமைக்க, நிவாஸ் கே. பிரசன்னா ஒளிப்பதிவு செய்கிறார். ஆத்யா பிரசாத் மற்றும் பவ்யா திரிகா நாயகிகளாக நடிக்கின்றனர். சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சார்லி, மைக்கேல் தங்கதுரை மற்றும் வீஜே பப்பு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில், 30 அடி உயர பேனரில் போஸ்டரை வெளியிட்டனர். இதுகுறித்து இயக்குனர் ராகவ் மிர்தாத் கூறியதாவது, “பரம்பரை போஸ்டர் பாணியில் இல்லாமல், முழுக்க கைகளால் வரைந்து, ஓவியமாக வடிவமைத்தோம். உலக வரலாற்றில் நடந்த போர்களை வரைந்து, நடு நாயகனாக ராஜு ‘பன் பட்டர் ஜாம்’ சாப்பிடும் விதமாக வரைந்தோம். அவர்மேல் அம்புகள் தாக்கியாலும், அவர் சிரித்தபடியே ‘பன் பட்டர் ஜாம்’ சாப்பிடுவது போன்ற காட்சிகளை உருவாக்கினோம்.
வாழ்வில் எத்தனையோ பிரச்னைகள் இருந்தாலும், அதை எடுத்துக்கொண்டு வருந்தாமல், அந்தந்த கணத்தை மகிழ்ச்சியோடு கடந்தால், வாழ்வு ‘பன் பட்டர் ஜாம்’ போல இனிக்கும் என்கிற கருத்தை இந்த போஸ்டர் கூறுகிறது” என்றார்.



