Saturday, September 14, 2024

பிரம்மாண்ட பட்ஜெட்டில் அரங்கங்கள்… பூஜையுடன் தொடங்கிய டிடி ரிட்டன்ஸ் 2 படப்பிடிப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சந்தானம் இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் கடந்த ஆண்டு நடித்து ‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படம் வெளியாகியது. இதில் சந்தானத்திற்கு ஜோடியாக ‘வேலையில்லா பட்டதாரி’, ‘இவன் வேற மாதிரி’ போன்ற படங்களில் நடித்த சுரபி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை தீபா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஜீ5 இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்கியது. திரைப்படம் ஓடிடியில் வெளியாகிய பின் படம் ரசிகர்கள் அனைவராலும் பாராட்டப் பெற்றது.

இப்படத்தின் அடுத்த பாகத்தை இயக்கவுள்ளனர். அதற்கான பூஜை விழா இன்று நடைபெற்றது. முதலாம் பாகத்தை இயக்கிய பிரேம் ஆனந்த் இப்படத்தையும் இயக்கவுள்ளார். படத்தில் நடிகர் சந்தானம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக மீனாக்ஷி சவுத்ரி நடிக்கவுள்ளார். 

இத்திரைப்படத்தின் கதை ஒரு சொகுசு கப்பலில் தொடங்கி தீவு ஒன்றில் நடைபெறும் வகையில் அமைந்துள்ளது. இதற்காக பிரம்மாண்ட பட்ஜெட்டில் அரங்கங்களை அமைக்கவுள்ளனர்.இந்த படத்தை நடிகர் ஆர்யா தயாரிக்கிறார்.

- Advertisement -

Read more

Local News