Tuesday, September 17, 2024

சூரியின் கருடன் படத்தின் வெற்றிக்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சசிகுமார்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

துரை செந்தில்குமார் இயக்கியத்தில் சூரி நடித்த கருடன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது. துரை செந்தில்குமார் இயக்கிய இந்தப் படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், மற்றும் சூரி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் இருந்தாலும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தனுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.படத்தின் இன்னொரு பலம் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எனலாம்.

கருடன் திரைப்படம் மே 31ஆம் தேதி வெளியானது.இப்படம் இன்று வரை ஓடிக் கொண்டிருக்கிறது. ஐந்து நாட்களாக ரசிகர்கள் திரையரங்குகளில் கூட்டமாக இருந்து வருவது படக்குழுவிற்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதை முன்னிட்டு, படத்தில் நடித்த இயக்குனர்-நடிகர் சசிகுமார் தனது எக்ஸ் பக்கத்தில், கருடன் படத்தை வெற்றியாக்கிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, “கருடன் மிக பெரிய வெற்றியாக்கிய உங்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும்” என்று பதிவிட்டுள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான கருடன் திரைப்படம் இன்றுடன் ஆறு நாட்களை கடந்துள்ளது. கடந்த ஐந்து நாட்களில் இப்படம் ரூபாய் 26 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், கருடன் படத்தின் வசூல் குறித்து படக்குழுவின் தரப்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

- Advertisement -

Read more

Local News