ஐஸ்வர்யா ராஜினிகாந்த் இயக்கும் ‘டெக்ஸ்லா’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாரா அபிஷேக் பச்சன்?

‘லால் சலாம்’ திரைப்படத்திற்குப் பிறகு, ஐஸ்வர்யா ராஜினிகாந்த் தற்போது இயக்கி வரும் புதிய திரைப்படம் ‘டெக்ஸ்லா’ ஆகும். இந்தப் படத்தை கண்ணன் ரவி தனது நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார்.

இந்த படத்தில் ஜெய் மற்றும் சுராஜ் வெஞ்சராமுடு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்‌ மேலும் ஆனந்த்ராஜ், ஜி.எம். சுந்தர் மற்றும் ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

மேலும், இந்தப் படத்தில் ஒரு கேமியோ கதாபாத்திரம் இடம்பெற உள்ளது. அந்த கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் நடிக்க வேண்டுமெனக் கருதி அவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading