Thursday, October 3, 2024

விபத்தில் இருந்து தப்பிய நடிகை பிரியங்கா மோகன்… என்னை நலம் விசாரித்த அனைவருக்கும் என் அன்பும் நன்றியும் என பதிவு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வெற்றிகரமாக பிஸியாக நடித்து வருகிற நடிகையாவார் பிரியங்கா மோகன். தற்போது எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள ‘பிரதர்’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் விளம்பர நிகழ்வுகளுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், தெலுங்கானாவின் தோரூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு கடை திறப்பு விழாவில் இன்று பிரியங்கா மோகன் பங்கேற்றார். அப்போது அவர் நின்று கொண்டிருந்த மேடை திடீரென சரிந்து விழுந்தது. இதனால், பிரியங்கா மோகன் உட்பட மேடையில் இருந்த அனைவரும் தரையில் விழுந்தனர். எதிர்பாராத இந்த சம்பவத்தில் அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கு பதிலாக, ‘எக்ஸ்’ தளத்தில் பிரியங்கா மோகன் வெளியிட்டுள்ள செய்தி: “தோரூரில் நான் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் ஏற்பட்ட விபத்தில் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளேன் என்பதை எனது நலம் விரும்பிகள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த சம்பவத்தில் காயம் அடைந்தவர்களின் விரைவான குணமடைவை நான் பிரார்த்திக்கிறேன். என்மீது அன்பும் அக்கறையும் காட்டிய அனைவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News