Wednesday, April 10, 2024

விஜய், அஜித் வில்லனுடன் மோதும் சிவகார்த்திகேயன்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் இருபத்தி மூன்றாவது படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்க, அனிரூத் இசையமைக்கிறார்.

ஸ்ரீலட்சுமி மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் வில்லனாக வித்யுத் ஜமால் நடிக்கிறார். இவர் விஜய் நடித்த ‘துப்பாக்கி’, அஜித் நடித்த ‘பில்லா’ இரண்டாம் பாகம், சூர்யா நடித்த ‘அஞ்சான்’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்தவர். தெலுங்கு மொழியில் அறிமுகமாகி இந்திப் படங்களில் நடித்து வரும் வித்யுத் ஜமால் இரண்டாவது முறையாக ‘துப்பாக்கி’ படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இணைகிறார்.

சிவகார்த்திகேயனுடன் வித்யுத் ஜமால் மோதும் ஒரு பயங்கர சண்டைக்காட்சி இந்தப் படத்தில் இடம்பெறுகிறது. இந்த சண்டைக்கு காட்சி ரசிகர்களை பெரிதும் கவரும் வகையில் எடுக்கப்பட்ட உள்ளது. முருகதாஸின் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் வித்யுத் ஜமால் இந்தப் படத்தில் வாய்ப்பு கிடைத்ததும் பெரும் மகிழ்ச்சி அடைந்தாராம்.

- Advertisement -

Read more

Local News