விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள “தி கோட்” படம் அடுத்த வாரம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் வெளியாவதற்கு பத்து நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இப்படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடக்குமா இல்லையா என்ற கேள்வி இன்னும் உள்ளே உள்ளது.

தற்போதைய தகவல்படி, “தி கோட்” படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது. இதுவே இப்படத்திற்கு கடைசி அப்டேட் ஆகும். விழா நடந்தால், அதில் விஜய் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது, எவ்வளவு கூட்டம் வருமோ என்பதெல்லாம் தீர்மானிக்க முடியாதது.

எனவே, விஜய் தவிர மற்ற படக்குழுவினர் கலந்து கொள்ளும் வகையில், ஒரு வெளீட்டிற்கு முந்தைய விழா மட்டுமே நடக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் தவிர, தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் படம் வெளியாகிறது. எனவே, சென்னை, ஐதராபாத், மும்பை போன்ற இடங்களில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்படும் என கூறப்படுகிறது. இன்னும் சில நாளில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகலாம்.