நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திரைப்படம் பேண்டஸி மற்றும் சயின்ஸ் பிக்ஷன் வகையிலானதாக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது

திரையுலகப் பிரபலங்கள் பலரும் படத்தைப் பார்த்து பாராட்டுகின்றனர். நடிகர் ரஜினிகாந்த், “கல்கி பார்த்தேன், வாவ்… என்ன ஒரு காவியம். இயக்குனர் நாக் அஷ்வின் இந்திய சினிமாவை மாறுபட்ட தளத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். இரண்டாம் பாகத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்,” என்று தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த இயக்குனர் நாக் அஷ்வின், “சார், பேச முடியவில்லை, எங்களது குழுவினர் உட்பட அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டோம்,” என்று குறிப்பிட்டார்.