சிறகடிக்க ஆசை தொடரில் கதாநாயகியாக நடித்த கோமதி பிரியா, தனது எளிமையான தோற்றத்துடனும், உணர்வுபூர்வமான நடிப்பாலும் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த ஆண்டுக்கான விஜய் டிவி விருதுகளில், அவர் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். அப்போது, அவர் பேசியதாவது, ‘இந்த சீரியலில் நான் செய்த மீனா கதாபாத்திரம், என் வாழ்க்கையிலும் மிக நெருக்கமானது.

இந்த சீரியலில் எனக்கு அப்பா இல்லாததைப் போலவே, என் உண்மை வாழ்க்கையிலும் என் அப்பா இல்லை. என் அம்மா ஒருவராகவே எங்களை வளர்த்தார். சென்னைக்கு வந்தபோது எனக்கு பல சிரமங்கள் இருந்தன; வாய்ப்புகள் எளிதாக கிடைக்கவில்லை. ஆனாலும் இப்போது மக்கள் எனக்கு அங்கீகாரம் அளித்திருக்கிறார்கள்’ என்று அவர் உருக்கமாகப் பேசினார்.

அப்போது, அவரது அப்பாவின் உருவத்தை ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் கொண்டு வந்த நிகழ்ச்சி குழுவினர், அவர் தனது மகளை வாழ்த்துவது போல ஒரு வீடியோ உருவாக்கினர், அதைப் பார்த்த கோமதி பிரியா மகிழ்ச்சியில் நெகிழ்ந்து போனார்.