Monday, October 14, 2024

லியோ 2 உருவானால் இதுதான் தலைப்பாம்… இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ‘கூலி’ என்ற படத்தை இயக்கி வரும் லோகேஷ், அதற்கான முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். இடையே, ரஜினிகாந்தின் உடல்நலக் குறைவால் சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு, அக்டோபர் 15ம் தேதி லோகேஷ் மீண்டும் ‘கூலி’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்கவுள்ளார்.

அண்மையில், லோகேஷ் கனகராஜ் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இளம் திரையுலக கலைஞர்களின் கேள்விகளுக்கு திறந்த மனத்துடன் பதிலளித்தார். நிகழ்ச்சியில் விஜய் திரையுலகில் இருந்து ஓய்வு பெறுவது குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போது, “நான் விஜய்யுடன் வேலை செய்ய விரும்புகிறேன், ஆனால் அவர் எடுக்கும் முடிவு அவரது தனிப்பட்ட விருப்பமாகும், அதில் நாமெல்லாம் தலையிட முடியாது” என கூறினார்.

மேலும், ‘லியோ’ திரைப்படம் பற்றி அவர் பேசுகையில், “இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவானால் வேண்டுமென்றால், ‘லியோ 2’ என பெயரிடுவதற்குப் பதிலாக ‘பார்த்திபன்’ என்று பெயரிட வாய்ப்பு உள்ளது” என்று குறிப்பிட்டார். ‘லியோ’ திரைப்படத்தில், விஜய் லியோதாஸ் மற்றும் பார்த்திபன் என்ற இரு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News