Saturday, September 14, 2024

ராம் சரண் மற்றும் அல்லு அர்ஜூனுடன் போட்டியா? பிரபாஸ் சொன்ன பதில்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென்னிந்திய சினிமா, நடிகர்களிடையே உள்ள ஒற்றுமைக்காகப் பாராட்டப்படுகிறது. இருந்தபோதிலும், சில நடிகர்களுக்கிடையே வசூல் ரீதியாக போட்டி நிலவுகிறது. பிரபாஸ் நடிப்பில் கடைசியாக வெளியான கல்கி திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இந்நிலையில், பிரபல நடிகர் பிரபாஸ் தனது சக நடிகர்களிடையே இருக்கும் போட்டியை ஒருமுறை ஒப்புக்கொண்டார். மேலும், அதை எவ்வாறு சமாளித்தார் என்பதையும் அவர் விளக்கினார்.

முன்னதாக நடந்த ஒரு நேர்காணலின் போது, ராம் சரண் மற்றும் அல்லு அர்ஜுனுடனான போட்டி பற்றி பிரபாஸிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர், “எல்லா துறைகளிலும் இருப்பதைப் போலவே, சினிமாவிலும் போட்டி உள்ளது. இருப்பினும், இப்போது இதுபோன்ற ஒரு விஷயத்தின் வெளிப்பாடு முன்பை விட அதிகமாக உள்ளது. எனினும், எந்தப் போட்டியுமின்றி திரைப்படங்களில் நடிக்கவே நான் கவனம் செலுத்துகிறேன்” என்று கூறினார்.

- Advertisement -

Read more

Local News