பஞ்சாபை சேர்ந்த மெஹ்ரின் பிர்சடா, தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். சில தெலுங்கு படங்களுக்கு பிறகு சுசீந்திரன் இயக்கிய ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த படத்தில் அவர் சந்தீப் கிஷனுடன் ஜோடியாக நடித்தார். ஆனால், அவர் நடித்த காட்சிகள் படத்தில் இடம் பெறவில்லை. படத்தின் நீளம் காரணமாக அனைத்து காட்சிகளும் நீக்கப்பட்டன. இதனால் மனம் உடைந்தவர் மீண்டும் தெலுங்கு சினிமாவிற்கே திரும்பினார். தெலுங்கு மற்றும் பஞ்சாபி படங்களில் நடித்தார்.



சில வருட இடைவெளிக்கு பிறகு ‘பட்டாஸ்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன்பிறகும் பெரிய வாய்ப்புகள் அமையவில்லை. கடந்த சில ஆண்டுகளாக அவர் வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடித்துக் கொண்டிருக்கிறார். இப்போதும் அவர் கைவசம் புதிய படங்கள் இல்லை. கன்னடத்தில் நடித்த ஒரு படம் இன்னும் வெளிவரவில்லை.



இந்த நிலையில், தற்போது தனது சமூக வலைத்தள பக்கங்களில் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.