டோவினோ தாமஸ் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் ‘2018’. கேரளாவில் 2018ம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளப் பாதிப்பின்போது ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு உதவி செய்து மனிதாபிமானத்தை வெளிப்படுத்திய சம்பவத்தை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கிய இப்படம் தமிழிலும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து லைகா நிறுவன தயாரிப்பில் படம் இயக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.இது குறித்து கடந்த ஆண்டே லைகா நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவர் சிம்பு நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் மோகன்லாலும் நடிக்க இருப்பதாகவும் மெகா பட்ஜெட்டில் உருவாகும் இதன் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.