Thursday, October 10, 2024

மகேஷ்பாபு ராஜமௌலி கூட்டணியில் உருவாகும் #SSMB29 படப்பிடிப்பு எப்போது? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்கு பிறகு, இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி தனது அடுத்த படமாக நடிகர் மகேஷ் பாபுவின் 29வது படத்தை இயக்கவுள்ளார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு முதல் இதற்கான முன் தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. இந்த படத்தில் மகேஷ் பாபு உடன் நடிகர் பிரித்விராஜ் இணைந்து நடிப்பார் என்று முன்னதாகவே கூறப்பட்டது.

இந்த படத்துக்காக மகேஷ் பாபு இதுவரை காணாத மாறுபட்ட தோற்றத்தில் தோன்றவுள்ளார். அவர் தலையில் நீளமான முடியும், முகத்தில் அடர்த்தியான தாடியும் வளர்த்து வருகிறார். இதன் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்றும் இயக்குனர் ராஜமௌலி தனது பிறந்தநாளை இன்று கொண்டாடும் நிலையில் இன்றைய நாளில் இப்படம் குறித்து ஏதாவது அப்டேட் வெளியாகுமா என்றும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

தற்போதைய தகவலின்படி, படத்தின் படப்பிடிப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

Read more

Local News