Saturday, September 14, 2024

மகாராஜா படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் நிதிலன்-ஐ நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் சிம்பு…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

குரங்கு பொம்மை’ படத்தைத் தொடர்ந்து, நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து, சில மாதங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் ‘மகாராஜா’. இந்த படம் உலகளவில் ரூ. 100 கோடியை கடந்தது, வசூல் ரீதியாக. இத்திரைப்படம் விமர்சகர்கள், ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்களிடமும் பாராட்டைப் பெற்றது. தற்போது, ஓடிடியில் இப்படத்தைப் பார்த்துவிட்டு பலரும் பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் சிம்பு இந்த படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார். இதுபற்றி நிதிலன் தனது சமூக வலைதளத்தில், “சிலம்பரசன் சார், மகாராஜா படத்தைப் பார்த்த பிறகு சந்தித்து பேசியதற்கு நன்றி. மகாராஜா படத்தைப் பற்றி ஆழமாக கலந்துரையாடினோம். நீங்கள் யதார்த்தமாகவும் மிகவும் எளிமையாகவும் இருந்தீர்கள். உங்களைச் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது,” என்று பதிவிட்டிருந்தார்.

- Advertisement -

Read more

Local News