Tuesday, September 24, 2024

பல வருடங்கள் கழித்து மீண்டும் மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி படத்தில் நடித்துவரும் நடிகர் நரேன்! #TRAIN

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் மிஷ்கின், நடிகர் நரேனை முக்கிய கதாபாத்திரத்தில் வைத்து சித்திரம் பேசுதடி மற்றும் அஞ்சாதே ஆகிய தமிழ்படங்களை இயக்கியுள்ளார். அதன் பின்னர், மிஷ்கின் “முகமூடி” படத்தில் நரேனை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். அதன் பிறகு, நரேன் தமிழ்படங்களில் நடிப்பதை குறைத்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, “கைதி” மற்றும் “விக்ரம்” போன்ற படங்கள் மூலம் அவருக்கு மீண்டும் புகழ் கிடைத்தது.  

இப்போது, எஸ். தாணு தயாரிப்பில் மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து உருவாக்கி வரும் “டிரெயின்” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நரேன் நடிக்கிறார். இது நீண்ட இடைவெளிக்கு பிறகு மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கும் படம். இதில் நரேன் போலீஸ் தோற்றத்தில் நடிக்கிறார்.  

இதற்கு முன், ஜெயராம், நாசர், டிம்பிள் ஹயாதி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். ஒரே இரவில் ரயிலில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை மையமாகக் கொண்டு இந்த சஸ்பென்ஸ் திரில்லர் படம் உருவாகி வருகிறது. 

- Advertisement -

Read more

Local News