Join our community of SUBSCRIBERS and be part of the conversation.

To subscribe, simply enter your email address on our website or click the subscribe button below. Don't worry, we respect your privacy and won't spam your inbox. Your information is safe with us.

News

Company:

Tuesday, March 11, 2025

Touring Talkies

பரபரப்பை ஏற்படுத்தும் நாமினேஷன் பாஸ் பேச்சுவார்த்தை… என்ன நடக்க போகிறது இன்று? #BiggBoss 8 Tamil

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பெண்கள் அணியில் மீண்டும் பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பித்துள்ளன. நாமினேஷன் ஃபிரி பாஸ் குறித்து ஆலோசனை செய்யும் பெண்கள் அணியில், ஒருவிதமான வெறுமை நிலவுவதை காணலாம். சமீபத்தில் நடந்த ஆள் மாறாட்ட டாஸ்க்கின் மூலம், சக போட்டியாளர்கள் தங்களைப் பற்றி பிற போட்டியாளர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதையும் அறிந்து கொண்டனர்.

பெண்கள் அணியின் உள்ளே வெறுப்பு இதனால், அணியினருக்குள் பரஸ்பர அன்பு குறைந்து காணப்படுகிறது, இது அனைவருக்கும் தெளிவாக தெரிகிறது. இந்த நிலையில், நாமினேஷன் பாஸ் குறித்து நடந்த பேச்சுவார்த்தையில், தர்ஷிகா, அன்ஷிதாவை இந்த எலிமினேஷனில் இருந்து பாதுகாக்க வேண்டும் என தனது முடிவை கூறினார். அன்ஷிதா இரண்டு முறை நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றதாலேயே, அவரை காப்பாற்ற முயற்சி செய்ய வேண்டும் என்றார். இதற்குப் பிறகு ஆனந்தி, பவித்ராவை நாமினேஷன் பாஸ் மூலம் எலிமினேஷனில் இருந்து பாதுகாக்கலாம் என கூறினார்.

தொடர்ந்து, சாச்சனா, அன்ஷிதாவா அல்லது பவித்ராவா என வரும்போது இருவரையும் காப்பாற்ற வேண்டும் போல் தோன்றுகிறது. அவர்கள் இருவருமே எலிமினேஷனில் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

பவித்ரா இதைத் தொடர்ந்து, “இந்த முறையும் ஜாக்குலின் எலிமினேட் செய்யப்பட மாட்டார் என்று நினைக்கிறேன்” என கூறினார். இதனால் கோபமடைந்த ஜாக்குலின், நான் இப்படி விளையாட விரும்பவில்லை எனக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார். இறுதியில் அன்ஷிதா தனது முடிவைத் தெரிவித்தபோது, “எனக்கு இதைப் பற்றி அதிகமாக பேசத் தேவையில்லை, எனக்கு இந்த நாமினேஷன் பாஸ் வேண்டாம்” எனத் தெளிவாக கூறினார். இதன் மூலம், அவர் தொடர்ந்து இரண்டு வாரங்களாக நாமினேஷன் பாஸை ஏற்க மறுத்து வருவதை அறியலாம்.

- Advertisement -

Read more

Local News

Hide WhatsApp Form
<p>How can I help you? :)</p>