Tuesday, October 1, 2024

நீங்கள் ஏன் இன்னும் ஓய்வு பெறவில்லை என்ற கேள்விக்கு ஷாருக்கான் சொன்ன பளீச் பதில்… என்ன சொன்னார் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ஷாருக்கான் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மேடையை அழகாக ஆக்கினார். குறிப்பாக, நடிகர் விக்கி கௌஷலுடன் இணைந்து ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்றியா மாமா’ பாடலுக்கு நடனமாடி, அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

அதன் பின்பு, நிகழ்ச்சியின் போது ஷாருக்கானிடம் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான கரண் ஜோஹர் அவரின் ஓய்வு குறித்து கேட்டார். அப்போது, ஷாருக் கான் சச்சின், சுனில் சேத்ரி, ரோஜர் பெடரர் போன்ற லெஜண்டுகள் எப்போது ஓய்வு பெற வேண்டும் என அவர்களுக்கு தெரிந்தது சரியான நேரத்தில் எடுத்தார்கள் என்றார்.

அதற்கு கரண் ஜோஹர் கிண்டலாக, பின்னர் நீங்கள் ஏன் ஓய்வு முடிவை எடுக்கவில்லை? என்று கேட்டார். இதைக் கேட்ட ஷாருக்கான், “நானும் தோனியும் வேறுபட்ட லெஜண்டுகள். முடிவை எடுத்த பிறகும் 10 ஐ.பி.எல் விளையாடுவோம், என்றார். இந்த பதிலைக் கேட்ட பலரும் விசிலடித்து கொண்டாடினர்.

- Advertisement -

Read more

Local News