Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

நான் சவ்பின் சாஹிர் மிகப்பெரிய ரசிகன்… மஞ்சும்மேல் பாய்ஸ் பட நடிகரை புகழ்ந்த அரவிந்த் சாமி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாள திரைப்பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் சவ்பின் சாஹிர் ஆவார். குறிப்பாக துல்கர் சல்மானின் நண்பராக பல படங்களில் அவருடன் இணைந்து நடித்ததோடு, அவர் அடிப்படையில் ஒரு உதவி இயக்குனராகவும் இருந்தார். பின்னர் துல்கர் சல்மானை வைத்து ‘பறவ’ என்ற படத்தை இயக்கியவர் ஆனார்.

சமீப காலங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் இருந்து விலகி, குணச்சித்திரங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், தயாரிப்பாளராகவும் மாறி, சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி வெற்றியடைந்த ‘மஞ்சும்மேல் பாய்ஸ்’ என்ற படத்தை தயாரித்து, அதில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்தார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியையும், நல்ல பெயரையும் பெற்றுத் தந்தது.

இந்நிலையில், “நான் சவ்பின் சாஹிரின் மிகப்பெரிய ரசிகன்” என்று நடிகர் அரவிந்த்சாமி கூறியுள்ளார். கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடித்த, 96 புகழ் பிரேம் குமார் இயக்கிய ‘மெய்யழகன்’ என்ற படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதன் புரமோஷன் நிகழ்ச்சியில் கார்த்தி, அரவிந்த்சாமி இருவரும் கலந்துக் கொண்டு உரையாடும் போது, அவர்களின் பேச்சு மலையாள திரைப்படங்களை குறித்தும் பேசினர்.

அப்போது சவ்பின் சாஹிர் குறித்து அரவிந்த்சாமி, “மஞ்சும்மேல் பாய்ஸ் படத்திற்கு முன்பே, அதாவது ‘கும்பலாங்கி நைட்ஸ்’ படத்தில் அவரது நடிப்பை நான் மிகவும் விரும்பி ரசித்தேன். அதன் பிறகு அவர் நடித்த படங்களை தவறாமல் பார்த்து வருகிறேன்” என்றார். இதற்கு கார்த்தி ‘கும்பலாங்கி நைட்’ ஒரு சிறந்த படம், சவ்பின் சாஹிர் ஒரு நடிகராக மட்டுமல்ல, இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பன்முக திறமை கொண்டவர்” என்று தன் பாராட்டுகளை தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News