Saturday, September 14, 2024

நந்தன் தந்த பிரமிப்பு இன்னும் அகலவில்லை… நந்தன் படக்குழுவினரை பாராட்டிய நடிகர் சூரி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கத்துக்குட்டி”, “உடன்பிறப்பே” போன்ற படங்களை இயக்கிய இரா. சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள “நந்தன்” படத்தில் நடிகர் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். உண்மை கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில், இதுவரை நாம் பார்த்திராத ஒரு புதிய கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்துள்ளார். இப்படத்தில் ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருந்தும், படத்தை வெளியிடாமல் இருந்து வந்தது. அண்மையில் சூரி, சசிகுமார் நடித்த “கருடன்” படம் வெற்றிப் பெற்றதையடுத்து, “நந்தன்” படமும் விரைவில் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், இப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

படத்தை பார்த்த நடிகர் சூரி, தனது எக்ஸ் தளத்தில் பாராட்டிக் குறிப்பிட்டுள்ளார். அதில், “படத்தைப் பார்த்து பல மணி நேரங்கள் ஆகிவிட்டது – ‘நந்தன்’ தந்த பிரமிப்பு இன்னும் அகலவில்லை. அன்பு இரா. சரவணன் அண்ணாவுக்கும், சசிகுமார் அண்ணாவுக்கும், ஜிப்ரான் தம்பிக்கும், ‘நந்தன்’ குழுவினருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,” எனப் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News