Saturday, September 14, 2024

டிமான்ட்டி காலனி 2 மட்டுமல்ல… 4ம் வரும்… நடிகர் அருள்நிதி சொன்ன அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அஜய் ஞானமுத்து – அருள்நிதி கூட்டணியில் வெளியான ‘டிமான்டி காலனி’ படம் வரவேற்பைப் பெற்றது. இவர்கள் கூட்டணியில் இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 15ல் படம் ரிலீசாகிறது. இந்நிலையில் நடிகர் அருள்நிதி இப்படம் குறித்து பல தகவல்கள் பகிர்ந்துள்ளார்.

“‘டிமான்டி காலனி 2’ படம் வெறும் பிசினஸிற்காக மட்டும் செய்யவில்லை. நிறைய முறை அஜய்யிடம் இந்த படம் செய்வது பற்றி கேட்டுள்ளேன். அவரும் நிச்சயமாக செய்வோம், கொஞ்சம் பொறுங்கள் என்பார். பிறகு ஒருநாள், ‘ஒரு சின்ன லீடு கிடைத்திருக்கிறது’ எனக் கூறி, அதை ஒரு முழு கதையாக உருவாக்கினார். மேலும், எனது உதவியாளர் வெங்கி இயக்குவார், நான் தயாரிக்கிறேன், படம் முழுக்க நான் கூட இருப்பேன் என்றார். பட அறிவிப்பும் வந்தது. பிறகு, வெங்கிதான் ‘அஜய்யே இயக்கட்டும்’ என்று சொன்னார்.

‘டிமான்டி காலனி 2’ படம் மேக்கிங்கிற்காகவே பேசப்படும். பெரிய வெற்றியைத் தரும் என நம்புகிறேன். இந்த படத்தின் முடிவில் மூன்றாம் பாகத்திற்கான லீடும் உள்ளது. அதன்பின் நான்காம் பாகம் வரை இந்த படம் செல்லும். அதற்குமேல் போகாது. எங்களுடன் ‘தங்கலான்’ உள்ளிட்ட படங்கள் வந்தாலும் ‘டிமான்டி காலனி’ படத்திற்காக ரசிகர்கள் உள்ளனர். அந்த நம்பிக்கையிலும், விடுமுறை வருவதாலும் ரிலீஸ் செய்கிறோம்.என்னைத் தேடி வரும் கதைகளையே மட்டும் நான் நடிக்கிறேன். யாரிடமும் போய் வாய்ப்பு கேட்டதில்லை. அதே சமயம் என்னை வைத்து படம் எடுத்த பாண்டிராஜ், அஜய் போன்ற இயக்குனர்களிடம் கதை இருக்கா என கேட்டுள்ளேன். புதிய இயக்குனர்களை வைத்து நான் படம் தயாரிக்க ஆசைப்படுகிறேன். அதற்கு கொஞ்சம் காலம் ஆகும்.

ஒருவேளை நான் சினிமாவிற்கு வரவில்லை என்றால் நிச்சயம் பிசினஸ்தான் செய்திருப்பேன். தாத்தாவின் எந்த கதையையும் என்னால் செய்ய முடியுமா என தெரியவில்லை. சரியாக செய்யவில்லை என்றால் எங்கள் வீட்டிலேயே திட்டுவார்கள். அதனால் அதை ரசித்து போவதே நல்லது. அரசியலுக்கு யாரும் வேண்டுமானாலும் வாங்க, போங்க, என்னை ஆள விடுங்கள். எனக்கு இதில் எந்த கருத்தும் இல்லை,” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News