ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஜெயிலர் 2 பாகத்தில் முதல் பாகத்தில் நடித்தவர்களும் சிலர் நடிக்கின்றனர்.

அதேசமயம் இப்படத்தில் ரஜினியின் மகனாகவும் போலீஸ் கதாபாத்திரத்திலும் நடித்த நடிகர் வசந்த் ரவி ஜெயிலர் படத்தின் கடைசி காட்சியில் இறந்துவிடுவது போல் காட்சி அமைந்திருக்கும். இந்நிலையில் வசந்த் ரவி ஜெயிலர் 2 வில் இருக்கிறாரா? இல்லையா என்பது சஸ்பென்ஸாக உள்ளது.
இது குறித்து வசந்த் ரவி சமீபத்திய பேட்டியில், ஜெயிலர் 2 உருவாகி வருவது மகிழ்ச்சி. என் சினிமா வாழ்க்கையில் ஜெயிலரில் அதுவும் ரஜினி சார் மகனாக நடித்தது பெரும் மகிழ்ச்சி. ஜெயிலர் 2வில் நான் இருக்கிறேனா? இல்லையா என்பது குறித்து தெரியாது. அது குறித்து படக்குழுதான் முடிவெடுக்க வேண்டும். நான் எதுவும் சொல்ல முடியாது. இப்போது இந்திரா என்ற படத்தில் கண் பார்வையற்ற போலீஸ் அதிகாரியாக வருகிறேன். ஆகஸ்ட் 22ல் படம் ரிலீஸ். ஜெயிலர் படத்தில் காமெடியனாக நடித்த சுனில் இதில் வில்லனாக வருகிறார் என்றுள்ளார்.