தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, தமிழில் ‘சுல்தான்’, ‘வாரிசு’ போன்ற படங்களில் நடித்துள்ளார். அவர் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். ரன்பீர் கபூருடன் நடித்த ‘அனிமல்’ திரைப்படம் பல மொழிகளில் வெளியாகி ரூ.800 கோடிக்கு மேல் வசூல் செய்தது.


தற்போது ராஷ்மிகா வெளியிட்டுவரும் கவர்ச்சி புகைப்படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. ரசிகர்கள் புகைப்படத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர், ராஷ்மிகா இந்திக்கு சென்ற பிறகு கவர்ச்சியில் எல்லை மீறியுள்ளார் என்று விமர்சித்தனர்.இதற்கு பதிலளித்த ராஷ்மிகா, “ரோம் நகரில் இருப்பவர்கள் ரோமன் போல வாழ வேண்டும் என்பது பெரியவர்கள் சொன்ன வார்த்தை. அதை நான் கடைபிடிக்கிறேன்.


பாலிவுட்டில் எப்படி இருக்க வேண்டுமோ அப்படித்தான் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் வாய்ப்புகள் வரும். ஆனாலும், நான் நடிகையாக கவர்ச்சியில் எனக்கென்று சில எல்லைகள் உள்ளன. அவற்றை நான் எப்போதும் மீறமாட்டேன். எந்த மொழியில் நடித்தாலும், அந்த மொழி பெண்ணாக மாறுவது எனக்கு பிடிக்கும்” என்றார்.