Wednesday, September 25, 2024

இயக்குனராகிறாரா நடிகர் அதர்வா? வெளியான புது தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகனாக இருப்பவர் அதர்வா. ‛பாணா காத்தாடி’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அவர், ‛முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி, 100, ஈட்டி, இமைக்கா நொடிகள், கணிதன்’ உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.

இதில் வெற்றி பெற்ற திரைப்படங்கள் சிலவே ஆகும். தற்போது, அவர் நடித்துள்ள படங்களில் ‛ஒத்தைக்கு ஒத்த, நிறங்கள் மூன்று, அட்ரஸ், டி.என்.ஏ’ போன்ற படங்கள் வரவிருக்கின்றன.

அவர் நடிகராக மட்டும் அல்லாமல், இயக்குனராகவும் ஆர்வம் கொண்டு அதற்காக பணியாற்றி வருகிறாராம். விரைவில் அவர் தனது முதல் படத்தை இயக்கவுள்ளார் என்பதற்கான தகவல்கள் வெளியாகியுள்ளன, மேலும் இதற்கான தயாரிப்புகளையும் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News