Monday, October 14, 2024

இன்னும் இரண்டு ஆண்டுகளில் இரும்புக்கை மாயவி படம் உருவாகும் – லோகேஷ் கனகராஜ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த்-ஐ வைத்து கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு அக்டோபர் 16ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் அவரின் அடுத்தடுத்த படங்கள் குறித்து. கேள்விகள் முன்வைக்கப்பட்டன அவற்றுக்கு மிகவும் நச் என்று பதிலளித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில், கூலி படத்தை தொடர்ந்து அடுத்ததாக கார்த்தியுடன் இணைந்து கைதி 2 படத்தை இயக்க உள்ளதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். அதேபோல் தான் முதன்முதலில் இருப்புக்கை மாயவி பட ஸ்கிரிப்டைதான் எழுதியதாகவும் ஆனால், முதலில் மாநகரம் படத்தை இயக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். இரும்புக்கை மாயாவி ஸ்கிரிப்ட் அனைவரையும் கவர்ந்த நிலையில் தனது 2வது படமாகவே இரும்புக்கை மாயாவி படத்தை இயக்க திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால் அந்த நேரத்தில் தனக்கு இந்த படத்தை இயக்கும் நம்பிக்கை இல்லாததால் அடுத்ததாக கைதி படத்தை இயக்கியதாகவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், இன்னும் இரண்டு ஆண்டுகளில் சூர்யாவை வைத்து இரும்புக்கை மாயாவி படத்தை இயக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மிகவும் பிரம்மாண்டமான தமிழ்நாட்டில் இதுவரை இல்லாதவகையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News