2018ம் ஆண்டு ஹிந்தியில் ‘தடக்’ என்ற படத்தின் மூலம் நடிகை ஜான்வி கபூர் தனது திரையுலக பயணத்தைத் தொடங்கினார். அவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளாக உள்ளார். தொடர்ந்து, ஜான்வி ரோகி, குட்லக், ஜெர்ரி ஆகிய படங்களில் நடித்தார். தற்போது, தெலுங்கில் ‘தேவரா’ என்ற படத்தில் ஜூனியர் என்டிஆருடன் ஜோடியாக நடித்து வருகிறார். இதையடுத்து, தமிழிலும் நல்ல கதைகளை தேடி நடிக்க ஆர்வமாக உள்ளார் ஜான்வி கபூர்.


இந்த நிலையில், அவர் ஒரு பேட்டியில், “நான் நடிக்கும் படங்களுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டாலும், நான் தலையில் மொட்டை அடிக்க மட்டும் தயாராக இல்லை. அந்த கதாபாத்திரத்திற்காக ஆஸ்கார் விருது கிடைக்கும் என்று சொன்னாலும் கூட, நான் இதைச் செய்ய மாட்டேன். காரணம் என்னவென்றால், என் அம்மா என்னுடைய நீண்ட தலைமுடிக்காக மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.

நான்கு நாட்களுக்கு ஒரு முறை, தலைக்குத் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வார். என் தலைமுடியைப் பராமரிப்பதில் அவர் அளவுக்கு யாரும் கவனம் செலுத்தவில்லை. அதனால், நான் முதல் படத்தில் எனது தலைமுடியை சிறிதளவு வெட்டியபோது, அவர் மிகவும் கோபமடைந்தார். அதனால், என் அம்மாவைப் போலவே, நானும் என் தலைமுடியை பராமரிக்க அதிக கவனம் செலுத்தி வருகிறேன்,” என்று கூறியுள்ளார் ஜான்வி கபூர்.