தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக நிவேதா தாமஸ் வலம் வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களில் நடிக்கும் நிலையில் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான ‘ஜில்லா’ படத்தில் நடித்து பிரபலமானார். அதனைத் தொடர்ந்து கமல்ஹாசனுடன் ‘பாபநாசம்’ மற்றும் ரஜினியுடன் ‘தர்பார்’ படங்களிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் தனது இணையதளத்தில் பகிர்ந்த பதிவு பேசுபொருளானது. அதில் அவர், ‘அதிக நாளாகிவிட்டது… ஆனால்… இறுதியாக…’ என்று இதய எமோஜியுடன் பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த ரசிகர்களில் சிலர் புதிய படம் குறித்த அறிவிப்பா? என்றும் சிலர் விரைவில் திருமணம் செய்யப்போகிறார் என்றும் கருத்து தெரிவித்தனர்.


இதற்கிடையில், ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் நிவேதா தாமஸ் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் பேசும்போது, “நான் நடிக்கும் படம் சம்பந்தமாக ஒரு பதிவை இணையத்தில் வெளியிட்டேன். அதை பார்த்து பலர் எனக்கு திருமணம் ஆகப்போகிறது என்று பேசினர். நான் நடித்துள்ள படத்தில் எனக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கிறார்கள். படத்தில் தாயாக நடித்துள்ளேன்” என்றார்.