Saturday, September 14, 2024

அடுத்த பிரமாண்டத்துக்கு தயாராகிறாரா ராஜமௌலி? ஆப்பிரிக்க நாவல்கள் மீது திரும்பிய பார்வை…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் ராஜமவுலி தனது அடுத்த படத்தை மகேஷ்பாபுவை வைத்து இயக்க உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியிடப்பட்டது. இந்த படம் காடுகளில் நடக்கும் சாகசங்களை மையப்படுத்தி பிக்ஷன் படமாக உருவாக உள்ளது என்று இயக்குனர் ராஜமவுலியின் தந்தை மற்றும் கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ராஜமவுலி புகழ்பெற்ற ஆப்பிரிக்க நாவலாசிரியரான வில்பர் ஸ்மித் எழுதிய ‘டிரையம்ப் ஆப் தி சன்’ மற்றும் ‘கிங் ஆப் கிங்ஸ்’ நாவல்களின் உரிமையை வாங்கியுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

விஜயேந்திர பிரசாத் கூறியுள்ள நிலையில், இயக்குனர் ராஜமவுலி இந்த இரண்டு நாவல்களை மகேஷ்பாபு நடிக்கும் படத்திற்காகவா அல்லது வேறு காரணத்திற்காகவா என்பதில் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதே சமயம், ஆப்பிரிக்க காடுகளில் காட்சிகளை படமாக்குவதற்காக இந்த நாவல்களை வாங்கியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News