Saturday, September 14, 2024

பெரிய இயக்குனர்கள் யாருக்கும் நான் தேவைப்படவில்லை என நினைக்கிறேன் – நடிகர் அருள்நிதி! #DEMONTE COLONY 2

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அஜய் ஞானமுத்து இயக்குநராக அறிமுகமான டிமான்ட்டி காலனி படத்தில் அருள்நிதி நடித்த நிலையில், அந்த படம் இருவருக்கும் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. அதன் பின்னர், இமைக்கா நொடிகள் படத்தை எடுத்து முன்னணி இயக்குநராக மாறிய அஜய் ஞானமுத்து சியான் விக்ரமை வைத்து கோப்ரா படத்தை இயக்கினார். அப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு டிமான்ட்டி காலனி 2 படத்தை ரிலீஸ் செய்ய காத்திருக்கிறார். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஒரே ஜானரில் படங்களை பண்ணி வருவதால், இயக்குநர்களும் எனக்கு அதே போன்ற கதைகளையே கொண்டு வருகின்றனர். த்ரில்லர் மற்றும் கிராமப்புற கதைகள் மட்டுமே வருகின்றன. பெரிய இயக்குநர்களுக்கு நான் தேவைப்படுவதில்லை என நினைக்கிறேன். யாருமே என்னை அணுகுவதில்லை. எனக்கும் நல்ல கமர்ஷியல் படங்களையும் ஓகே ஓகே போன்ற காமெடி படங்களையும் செய்ய வேண்டும் என்கிற ஆசை உள்ளது. கூடிய சீக்கிரமே என்னுடைய படங்களின் ஜானர் மாறும் எனக் கூறியுள்ளார் அருள்நிதி.

- Advertisement -

Read more

Local News