Tuesday, July 2, 2024

நாளை ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்க போகும் ராகவா லாரன்ஸ்! என்ன தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ராகவா லாரன்ஸ் மாற்றம் என்ற அமைப்பின் மூலம் ஏழை எளியவர்களுக்கு பல உதவிகளை செய்துவருகிறார்.இச்சமயம் நாளை இரண்டு புதிய படங்களின் அறிவிப்பை வெளியிடுவதாகவும், இரண்டுமே அவரது சொந்த தயாரிப்பில் உருவாகும் என்றும் அறிவித்ததை தொடர்ந்து, ரசிகர்கள் அவரது அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ரஜினிகாந்த் நடித்த ’உழைப்பாளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமான ராகவா லாரன்ஸ், அதன் பின்னர் பல்வேறு படங்களுக்காக நடன இயக்குனராக பணியாற்றினார். பின்னர் நடிகராக மாறிய ராகவா லாரன்ஸ், ’முனி’ மற்றும் ’காஞ்சனா’ உள்ளிட்ட சில வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.

கடைசியாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த படங்களில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பெரிய வெற்றி பெற்றது ஆனால் சந்திரமுகி 2 கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வி அடைந்தது.

இந்நிலையில், ராகவா லாரன்ஸ் தனது ராகவா ராகவேந்திரா புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் இரண்டு புதிய திரைப்படங்களை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், இந்த படங்களின் அறிவிப்பு நாளை வெளியாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

- Advertisement -

Read more

Local News