நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தனது முதல் தமிழ் திரைப்படத்தை இயக்குகிறார். இந்த திரைப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். இசையமைப்பை தமன் மேற்கொள்கிறார். கடந்த சில மாதங்களாக இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்றுவந்தன. தற்போது, இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதற்கட்டமாக, இந்த படப்பிடிப்பில் சந்தீப் கிஷன் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கி தொடங்கியதாக கூறப்படுகிறது.