Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

கதையின் நாயகனாக நடிக்கும் நாய்… என்ன சொல்ல வருகிறது ‘கூரன்’ திரைப்படம்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கனா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் விக்கி தயாரிக்கும் திரைப்படம் ‘கூரன்’. இந்தப் படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர், ஒய்.ஜி. மகேந்திரன், சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியன், இந்திரஜா, மற்றும் ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மாட்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார் மற்றும் சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.

படத்தைப் பற்றி இயக்குநர் நிதின் வேமுபதி கூறியதாவது: “சாதாரணமாக, மனிதர்கள் நியாயத்திற்காக நீதிமன்றத்திற்கு சென்று போராடுவதை நாம் அடிக்கடி பார்த்து வருகிறோம். ஆனால், இந்த திரைப்படத்தில் ஒரு நாய் தனது நியாயத்திற்காக நீதிமன்றத்தின் படிக்கட்டில் ஏறி போராடுகிறது.

மனித உயிரும் விலங்குகள் உயிரும் ஒரே மாதிரியாக மதிக்கப்பட வேண்டும். இந்த உலகம் மனிதர்களுக்கே உரியது அல்ல; விலங்குகள், பறவைகள், மரங்கள், செடிகள், மற்றும் கொடிகள் ஆகியவற்றுக்கானதும் கூட. இதைப் பொருத்தமான வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புரிந்துகொள்வதற்காக விளக்கமாக உருவாக்கியுள்ளோம். குறிப்பாக, இப்படத்தில் பயிற்சி பெற்ற ஜான்சி என்ற போலீஸ் நாய் கதையின் நாயகனாக நடித்துள்ளது,” என்றார்.

- Advertisement -

Read more

Local News