Saturday, September 14, 2024

தள்ளிப்போனது கங்கனா ரணாவத்-ன் ‘எமர்ஜென்சி’ திரைப்படம்… தணிக்கைகாக காத்திருக்கும் படக்குழு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலிவுட்டில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். 2006-ஆம் ஆண்டு அனுராக் காஷ்யப் இயக்கிய ‘கேங்ஸ்டர்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான கங்கனா, தனது அபாரமான நடிப்பினால் இதுவரை நான்கு முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார்.

2019ஆம் ஆண்டு ‘மணிகர்னிகா- ஜான்சி ராணி’ படத்தை கிரிஷ் ஜகர்லாமுடியுடன் இணைந்து இயக்கினார். அதனைத் தொடர்ந்து, ‘எமர்ஜென்சி’ படத்தை முழுமையாக கங்கனா ரணாவதே இயக்கியுள்ளார். சமீபத்தில், இந்தப் படத்தை தணிக்கை செய்யாமல் தடுத்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்தப் படம் இன்றைக்கு வெளியாக இருந்த நிலையில், கங்கனா தனது எக்ஸ் பக்கத்தில், ‘எனது இயக்கத்தில் உருவான எமர்ஜென்சி திரைப்படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பதை கனத்த இதயத்துடன் அறிவிக்கிறேன். தணிக்கை வாரியத்திடம் இருந்து சான்றிதழுக்காக காத்திருக்கிறோம். விரைவில் புதிய வெளியீட்டு தேதியை அறிவிப்போம். உங்கள் காத்திருப்புக்கும் புரிதலுக்கும் நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News