Tuesday, September 17, 2024

குட்டி ட்ரெஸ் போட்டு கவர்ச்சி போஸ் கொடுத்த ஆண்ட்ரியா… குவியும் லைக்குகள்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பின்னணி பாடகியாக தன் பயணத்தை ஆரம்பித்த நடிகை ஆண்ட்ரியா, முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததன் மூலம் டாப் நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்தார். தற்போது பிசாசு 2, நோ என்ட்ரி, மாளிகை போன்ற படங்களில் பிஸியாக நடித்து வரும் ஆண்ட்ரியா, தனது ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில் குதூகலமாக போஸ் கொடுத்துள்ளார்.

சரத்குமார் மற்றும் ஜோதிகா நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் புடவை கட்டிக்கொண்டு, குடும்ப குத்துவிளக்காக வந்து அனைவரின் மனதையும் கவர்ந்தவர் நடிகை ஆண்ட்ரியா. இந்த படம் வித்தியாசமான கதை அம்சத்தால் பெரிய அளவில் வெற்றி பெற்று பெரும் வசூலை அள்ளியது. அழகான முகம், அம்சமான நிறம் என அனைத்தும் பொருந்தியதால் தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார் ஆண்ட்ரியா.

அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, செல்வராகவன் இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்தார். பின்னர் கமலுடன் விஸ்வரூபம் படத்தில் நடித்த ஆண்ட்ரியாவிற்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. தரமணி, துப்பறிவாளன், வட சென்னை, வலியவன், அரண்மனை, என்றென்றும் புன்னகை, மாஸ்டர் போன்ற தரமான படங்களில் நடித்து வந்த ஆண்ட்ரியா, நயன்தாரா, சமந்தா போன்ற கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அந்த வகையில், சிபி ராஜுடன் வட்டம் திரைப்படத்தில் நடித்தார். இதைத் தொடர்ந்து அனல் மேலே பனித்துளி படத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டைப் பெற்றார்.

மயக்கும் குரல்வளம், அசரவைக்கும் அழகு, வசீகரிக்கும் பெண்ணான ஆண்ட்ரியா, இசையமைப்பாளர் அனிருத்துடன் நெருங்கி பழகி அவரை காதலித்தார். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியானது, ஆனால் அதன் பிறகு இருவரும் பிரிந்தனர். இதனால், மன விரக்தியில் இருந்த ஆண்ட்ரியா படங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இல்லாமல் இருந்தார். தற்போது, அதிலிருந்து மீண்டு, வெளிநாட்டில் ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார். சமீபத்தில், வெள்ளை ஷர்ட் மற்றும் குட்டி டவுசருடன் அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார், இதற்கு மலைபோல் லைக்குகள் குவிந்துகொண்டிருக்கின்றன.

- Advertisement -

Read more

Local News