Friday, October 4, 2024

யார் இங்கு பெரிய நடிகர் ? தெலுங்கு தயாரிப்பாளர் சொன்ன பதில்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் டகுபதி சுரேஷ் பாபு பல படங்களை தயாரித்துள்ளார். அவர் சமீபத்தில் பவன் கல்யாண், அல்லு அர்ஜுன், பிரபாஸ் ஆகியோரை குறித்து பேசியுள்ளார்.  

அவர் கூறியதாவது, ‘ஒரு நட்சத்திரம் மட்டும் ஒரு படத்தை வெற்றியாக்க முடியாது. ஒரு நல்ல இயக்குனருடன் இணைந்து பணிபுரிந்தால், படத்தின் வெற்றி விகிதம் அதிகரிக்கும். பவன் கல்யாண், பிரபாஸ், அல்லு அர்ஜுன் போன்ற நடிகர்கள் தனியாகவும் பெரிய வெற்றிப் படங்களை கொடுக்க முடியும்.  

வெற்றியின் மந்திரம் என்பது, நடிகர், இயக்குனர் ஆகியோர் சேர்ந்ததுதான். அதேபோல் டக்குபதி சுரேஷ் பாபுவிடம், தமிழ் சினிமாவின் எதிர்காலம் குறித்த அவரது எண்ணங்கள் குறித்து கேட்கப்பட்டது, குறிப்பாக விஜய் மற்றும் அஜித் தங்கள் கவனத்தை அரசியல் மற்றும் தங்களது தொழில்களின் பக்கம் திரும்பயுள்ள நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக, அவர், இந்த நட்சத்திரங்கள் நகரும் போது வெற்றிடத்தை , புதிய நட்சத்திரங்கள் பிடிப்பார்கள் என்று சிலர் நம்பினாலும் அது கடினமான ஒன்றாகும் என குறிப்பிடப்பட்டார். மேலும் இன்றும்கூட ரஜினிகாந்த், விஜய் மற்றும் அஜித் யார் இவர்களுள் பெரிய நட்சத்திரம் என்ற விவாதங்கள் தொடர்ந்து நடந்துதான் வருகிறது என்றார்.

- Advertisement -

Read more

Local News