நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது முதல் திரைப்படத்தை சந்தீப் கிஷனைக் கதாநாயகனாகக் கொண்டு இயக்கி வருகிறார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. தாய்லாந்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. மேலும், ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் என்று கூறப்பட்டிருந்தாலும், இதுவரை அதுகுறித்து எந்தத் தகவலும் வெளிவரவில்லை.

இந்நிலையில், தற்போது ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, இப்படத்தின் பட்ஜெட்டில் தற்போது சிறு பிரச்சினை என்றும் அதுபோல் படப்பிடிப்பு முடிந்துவிட்டது ஆனால் ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட வேண்டியது உள்ளது என்று வெவ்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இதுகுறித்து எந்தவிதமான உறுதியான தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.