கடந்த 2022-ல் கன்னடத்தில் வெளியான காந்தாரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரிஷப் ஷெட்டி கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியும் இருந்தார். இந்த படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. இதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமாக காந்தாரா சாப்டர் 1 என்கிற டைட்டிலுடன் படப்பிடிப்பை சில மாதங்களுக்கு முன்பு துவங்கினார்கள்.தற்போது கர்நாடகாவில் உள்ள கொல்லூரில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கேரளாவை சேர்ந்த கபில் என்கிற துணை நடிகர் இதில் கலந்துகொண்டு நடித்து வந்தார். தனக்கு காட்சி இல்லாத ஓய்வு நேரத்தில் அருகில் இருந்த கொல்லூர் சவுபர்ணிகா ஆற்றில் குளிப்பதற்காக சென்றவர் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார். இதனை தொடர்ந்து தீயணைப்புத் துறையும், உள்ளூர் மக்களும் சேர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அன்று மாலை அவரது உடல் சடலமாக மீட்டெடுக்கப்பட்டது. இவரை தொடர்ந்து தற்காலிகமாக காந்தாரா படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
