தமிழில் ‘மிஸ்டர் எக்ஸ்’, ‘வேட்டுவம்’ போன்ற படங்களில் நடித்துவரும் ஆர்யா, தற்போது தனது 36வது திரைப்படமாக ரன் பேபி ரன் பட இயக்குனர் ஜியென் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கான கதையை பிரபல கதாசிரியர் முரளி கோபி எழுதியுள்ளார். இதில் ரெஜினா மற்றும் நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தமிழ் மற்றும் மலையாளம் இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு ‘அனந்தன் காடு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதற்கான முதல் பார்வை மற்றும் டைட்டில் டீசரும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த டீசர், காட்டை மையமாகக் கொண்டு, அங்கு வாழும் மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே நடைபெறும் மோதல் கதையின் மையக் கருவாக அமைந்திருப்பது தெளிவாக தெரிகிறது. .