Touring Talkies
100% Cinema

Tuesday, July 1, 2025

Touring Talkies

‘கண்ணப்பா’ திரைப்படம் நமக்கு இதைதான் உணர்த்துகிறது – நடிகை ராதிகா டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மோகன் பாபுவின் தயாரிப்பில், அவரது மகன் விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கண்ணப்பா’ கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதில் பிரபாஸ், அக்‌ஷய் குமார், மோகன்லால், காஜல் அகர்வால், சரத்குமார் உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நேற்று (ஜூன் 30) சென்னை நகரத்தில் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சி ஒளிபரப்பப்பட்டது.

அந்த நிகழ்வில், இயக்குநர்கள் பி.வாசு, பொன்ராம், நடிகர் மற்றும் இயக்குநர் பிரபுதேவா, நடிகை ராதிகா, அரசியல்வாதி மற்றும் கல்வியாளர் ஏ.சி. சண்முகம், நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன், நடிகர் தியாகராஜன், இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு இந்த திரைப்படத்தை பார்த்தனர்.

படத்தை பார்த்தபின் நடிகை ராதிகா கூறியதாவது: “முன்னதாக மோகன் பாபு அவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவிக்க விரும்புகிறேன். என் தந்தை கடவுளை நம்பாதவர். ஒருநாள் அவரிடம் ‘கடவுள் இருக்கிறாரா?’ என்று கேட்டபோது, ‘நீ நினைப்பதே உண்மை’ என்றார். இந்தப் படத்தை பார்த்தபோது எனக்கு அவரது நினைவு வந்தது.

இது ஆன்மிகப் படம் என்றாலும், ‘பக்தி’ என்ற உணர்வை மிகவும் அழகாகவும் ஆழமாகவும் சொல்லியிருக்கிறார்கள். விஷ்ணு மஞ்சு தனது நடிப்பில் திண்ணன் மற்றும் கண்ணப்பா என இரு வேடங்களிலும் அற்புதமான பரிணாமத்துடன் நடித்துள்ளார். இதில் என் கணவர் சரத்குமாரும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது ஒரு தெய்வீகக் கடமையாகவே அவரால் உணரப்பட்டது. நம்மை மீறி ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்பதை இன்றைய சமுதாயத்திற்கு இந்தப் படம் உணர்த்துகிறது,” என்று தனது பார்வையை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News