தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெய் தற்போது ‘ஒர்க்கர்’ என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதில் ஜெய்க்கு ஜோடியாக ரீஷ்மா நனையா நடிக்கிறார்.

வினய் கிருஷ்ணா இயக்கும் இப்படத்தில் யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நாகினீடு, பரத் கல்யாண், பிரவீனா, ஸ்ரீஜா ரவி, சசி லயா, வெங்கட் செங்குட்டுவன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தின் பூஜை விழா சென்னையில் நடந்தது. இதன் படப்பிடிப்பு புதுச்சேரியில் தொடங்கி வேகமாக நடைபெற்று வருகிறது. ஒளிப்பதிவை அஞ்சி மேற்கொள்கிறார். இசையை ஜிப்ரான் அமைக்கிறார்.
இயக்குனர் வினய் கிருஷ்ணா கூறுகையில், “உண்மையான உணர்வுகள், சுவாரஸ்யமான கதை, ரசிகர்களை கவரும் தருணங்கள் என ‘ஒர்க்கர்’ படம் சிறப்பாக உருவாகி வருகிறது. அனைத்து தரப்பு ரசிகர்களும் இப்படத்தை விரும்புவார்கள். விரைவில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் ரசிகர்களுக்காக வெளியிடப்படும் என்றார். எதிர்பார்ப்புகளுக்கு இடையே தயாராகும் இப்படத்தை ப்ரிமுக் பிரசன்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் எம். ஷோபனா ராணி தயாரிக்கிறார்.